CRICKETLATEST UPDATESNEWSTAMIL

பாகிஸ்தான் அணியினர் 6 பேருக்கு கொரோனா

மூன்று 20 ஓவர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினர் நியூசிலாந்துக்கு சென்றுள்ளனர். புறப்படுவதற்கு முன்பாக பாகிஸ்தானில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் எந்த வீரருக்கும் பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நியூசிலாந்துக்கு சென்றதும் நடத்தப்பட்ட பரிசோதனையில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தனியாக வேறு இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. இதில் வீரர்கள் எத்தனை பேர், பயிற்சி உதவியாளர் எத்தனை பேர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker