TAMIL

ரூ .1 கோடி மதிப்புள்ள வாட்ச் கட்டியிருப்பதை வெளிப்படுத்திய இளம் இந்திய வீரர்

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சகோதரர் கிருனாலின் பிறந்தநாளில் ரூ .1 கோடி மதிப்புள்ள கடிகாரத்தை கட்டியிருப்பதை வெளிப்படுத்தினார்.

கொரோனா காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டு நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது, பல போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.



இவ்வாறான சூழலில் இந்திய நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா தனது சகோதரர் கிருனாலின் பிறந்த நாளை அவருக்கு கலோரி இல்லாத கேக் கொடுத்து கொண்டாடினார்

இந்த சந்தர்ப்பத்தில், ஹார்டிக் தான் ஸ்டைலான ரூ .1 கோடி மதிப்புள்ள கடிகாரத்தை கட்டியிருப்பதை வெளிப்படுத்தினார்.

அவர் கட்டியிருந்த கடிகாரம் ரோலக்ஸ் டேடோனா மஞ்சள் தங்க காஸ்மோகிராஃப் 40 மாடல் கைகடிகாரம். அதன் விலை ரூ .1 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

ஐபிஎல் தொடரில் அதிக வருமானம் ஈட்டியவர்களில் ஹர்திக்கும் ஒருவர், மும்பை அணி 11 கோடி ரூபாய்க்கு அவரை ஏலம் எடுத்துள்ளது



இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) மத்திய ஒப்பந்தங்கள் பட்டியலில் ஹர்திக் பி பிரிவில் இடம்பிடித்துள்ளார், இதன் மூலம் அவர் ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker