IPL TAMILNEWSTAMIL

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 224 ரன்கள் குவிப்பு

14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 4-வது லீக் ஆட்டத்தில் பஞ்சப் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. மும்பையில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி, பஞ்சப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. 

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல், தீபக் ஹூடா ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் பஞ்சாப் அணி ரன் மழை பொழிந்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 221- ரன்கள் சேர்த்தது. 

அதிகபட்சமாக கே.எல் ராகுல் 91 ரன்களும் தீபக் ஹூடா 64 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து, 222- ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்கிறது. 

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker