TAMIL

ஐபிஎல்-க்காக டி20 உலக கோப்பை ஒத்திவைக்கப்பட்டுள்ளது; அக்தர் விமர்சனம்

வரும் அக்டோபர் – நவம்பர் மாதத்தில் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிட்டப்பட்டிருந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக கோப்பை கிரிக்கெட் தொடரை ஐசிசி ஒத்திவைத்துள்ளது.

உலக கோப்பை ரத்து செய்யப்பட்ட நிலையில், ஐபிஎல் போட்டியை செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நடடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாக குழுவின் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், ஐபிஎல் போட்டிக்காக உலக கோப்பை தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அக்தர் கூறுகையில் “டி20 உலகக் கோப்பை நடத்தப்பட வாய்ப்பிருந்தது. ஆனால், அது ரத்து செய்யப்பட்டு விட்டது. ஐபிஎல்-க்கு எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாது.

உலகக் கோப்பைக்கு என்னவானால் என்ன?” என்று விமர்சித்துள்ளார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker