CRICKETNEWSTAMIL

உள்ளூர் மைதானத்தில் விளையாடாதது கூட நல்லதுதான் – பெங்களூர் கேப்டன் விராட்கோலி சொல்கிறார்

8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடர் சென்னை, பெங்களூர், மும்பை, அகமதாபாத், கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களில் நடக்கிறது.

பொதுவாக ஒவ்வொரு அணியும் உள்ளூர் மைதானத்தில் 7 லீக் ஆட்டங்களில் மோதும். இது அந்த அணிக்கு சாதகமாக அமையும். ஆனால் இந்த சீசனில் எந்த அணிக்கும் அதன் உள்ளூர் மைதானத்தில் போட்டிகள் இல்லை.

கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக போட்டிகள் நடத்தப்படும் இடங்கள் குறைக்கப்பட்டு உள்ளன.

அதே போல் போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதியில்லை.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் முதல் ஆட்டத்தில் விராட்கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்- ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதற்காக இரு அணி வீரர்களும் கடும் பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாங்கள விளையாடுவதை ரசிகர்கள் நேரில் பார்ப்பதை தவற விடுவார்கள் என்பதை உண்மையில் நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் நல்ல வி‌ஷயம் என்ன வென்றால் நாங்கள் இந்தியாவுக்கு திரும்பி வந்துள்ளோம்.

மேலும் ஒரு நேர்மறையான வி‌ஷயம் என்னவென்றால் உள்ளூரில் விளையாடும் சாதகம் இல்லாமல் இருப்பது. உள்ளூர் மைதானங்களில் விளையாடாதது கூட நல்லதுதான். ஒவ்வொரு அணியும் பொதுவான இடங்களில் விளையாடுகின்றன.

இதல் உங்கள் அணியின் வலிமை உண்மையில் வெளிப்படும். கடந்த ஐ.பி.எல். மிகவும் போட்டி நிறைந்ததாக இருந்தது. கடைசி மூன்று அல்லது நான்கு ஆட்டங்கள் வரை அனைத்து அணியும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவதை கணக்கிட்டு கொண்டிருந்தன. இந்த போட்டி தொடவது மிகவும் சிறந்தது என்று நான் கருதுகிறேன். இந்த முறையும் போட்டி தொடர் சவாலாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker