CRICKETLATEST UPDATESNEWSTAMIL
கொரோனா சிக்கல் தீர்ந்தது : தென்ஆப்பிரிக்கா – இங்கிலாந்து ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது

தென்ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் கேப்டவுனில் நடக்க இருந்தது. ஆனால் தென்ஆப்பிரிக்க வீரர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் கடைசி நேரத்தில் இந்த ஆட்டம் தள்ளிவைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து எஞ்சிய தென்ஆப்பிரிக்க வீரர்கள், உதவியாளர்கள் அனைவருக்கும் உடனடியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வந்துள்ளது. இதையடுத்து இந்த தொடர் நடப்பது உறுதியாகியிருக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி பார்ல் நகரில் இன்று (இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணி) நடக்கிறது.