TAMIL
4-வது 20 ஓவர் கிரிக்கெட்: நியூசிலாந்து அணிக்கு 166 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது இந்தியா
நியூசிலாந்து அணிக்கு 166 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணையித்துள்ளது.
பதிவு: ஜனவரி 31, 2020 14:28 PM
வெலிங்டன்,
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இந்தியா தொடரை கைப்பற்றி விட்டது.
அடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் போட்டி வெலிங்டனில் உள்ள வெஸ்ட்பேக் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியுசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 50 ரன்களும் (ஆட்டமிழக்காமல்) லோகேஷ் ராகுல் 39 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக இஷ் சோதி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.