TAMIL

20 ஓவர் கிரிக்கெட்: வங்காளதேசத்தை வீழ்த்தியது பாகிஸ்தான்

பாகிஸ்தான் – வங்காளதேச அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லாகூரில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 6 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் 65 ரன்கள் சேர்த்தார்.



அடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 16.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 137 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கேப்டன் பாபர் அசாம் 66 ரன்களும், முகமது ஹபீஸ் 67 ரன்களும் விளாசி களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 3 போட்டி கொண்ட இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

அந்த அணி முதல் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருந்தது.



இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் லாகூரில் நாளை நடக்கிறது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker