ENGLISHIPL TAMILLATEST UPDATESNEWSTAMIL

வெர்சன் 2.0: டாப் 3 அணிகளுக்கு தண்ணி காட்டிய கிங்ஸ் லெவன் பஞ்சாப்

ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் ஒன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப். ஆனால் அந்த அணிக்கு முதல் பாதி தொடர் சிறப்பாக அமையவில்லை. 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.

இதனால் பஞ்சாப் அணி அவ்வளவுதான் என கருதப்பட்டது. இந்நிலையில்தான் 2-வது பாதி தொடரில் கிறிஸ் கெய்ல் உடன் களம் இறங்கியது. அதன்பின் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

8-வது போட்டியில் ஆர்சிபி-யையும், 9-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை இரண்டு முறை சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்ட நிலையிலும், நேற்று டெல்லி அணியையும் வீழ்த்தியுள்ளது. இந்த மூன்று அணிகளும் பாயின்ட் டேபிளில் டாப் 3 வரிசையில் உள்ளது.

ஒரு வெற்றியுடன் கடைசி இடத்தில் இருந்த பஞ்சாப் தற்போது 10 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளளது. இன்னும் 4 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த நான்கிலும் வெற்றி பெற்றால் பிளே ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறிவிடும்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker