CRICKETLATEST UPDATESNEWSTAMIL

வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர் பொறுப்பான ஆட்டம்- இந்தியா 336 ரன்களில் ஆல் அவுட்

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 369 ரன் சேர்த்தது. இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நிதானமாக விளையாடியது. போட்டியின் 2ம் நாளான நேற்றைய ஆட்டத்தின்போது 26 ஓவர் முடிந்த நிலையில் மழை பெய்ததால் போட்டி நிறுத்தப்பட்டது. ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் எடுத்திருந்தது.
 
இந்நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனினும் வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் 336 ரன்களில் முடிவுக்கு வந்தது. அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 67 ரன்கள் அடித்தார். வாஷிங்டன் சுந்தர் 62 ரன்களும், ரகானே 37 ரன்களும், மயங்க் அகர்வால் 38 ரன்களும் எடுத்தனர். 
 
ஆஸ்திரேலியா தரப்பில் ஹாசில்வுட் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஸ்டார்க், கம்மின்ஸ் தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 33 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி 2ம் இன்னிங்சை ஆடி வருகிறது.
 

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker