CRICKETLATEST UPDATESNEWSTAMIL

மெல்போர்ன் டெஸ்ட்: ரசிகருக்கு கொரோனா

இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதிய 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. இந்த போட்டியை 30 ஆயிரம் ரசிகர்கள் மைதானத்தில் அமர்ந்து ரசித்தனர்.

இந்தநிலையில் மெல்போர்ன் மைதானத்துக்கு வந்திருந்த ரசிகர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. 30 வயது கொண்ட அந்த நபர் முதலில் மைதானத்துக்கு வரும்போது தொற்று பாதிப்பு இருக்கவில்லை என்றும், மைதான வளாகத்திலோ, அல்லது அருகே இருந்த வர்த்தக வளாகத்தில் இருந்தோ அவருக்கு அந்த பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து டிசம்பர் 27-ந்தேதி அந்த மைதானத்தில் ‘‘ஜோன்-5’’ பகுதியில் கூடியிருந்த ரசிகர்கள் கொரோனா பரிசோதனைச் செய்துகொள்ளுமாறும், அறிகுறி இருப்பவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதன்காரணமாக இன்று சிட்னியில் தொடங்கிய 3-வது டெஸ்டில் ரசிகர்களுக்கு முககவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முககவசம் அணிந்தவாறு ரசிகர்கள் மைதானத்துக்குள் நுழைந்தனர்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker