TAMIL

பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட கோலி ஒப்புதல்கங்குலி பேட்டி

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர் சவுரவ் கங்குலி கொல்கத்தாவில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை நடத்துவது குறித்து நாங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். அதற்கான நடவடிக்கைகளை நாங்கள் தொடங்க வேண்டும். பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட இந்திய கேப்டன் விராட் கோலி ஒப்புக்கொண்டிருக்கிறார் என்பதை சொல்லிக் கொள்கிறேன். இந்த வகை போட்டியில் பங்கேற்பதற்கு கோலிக்கு விருப்பம் இல்லை என்ற தகவல் தவறானது. எனவே பகல்-இரவு டெஸ்டில் விளையாட கேப்டன் ஏற்றுக்கொள்ளும் போது, எல்லாமே எளிதாகி விடும். அணியை முன்னெடுத்துச் செல்ல பகல்-இரவு டெஸ்ட் போட்டி அவசியமானதாகும். இது நிச்சயம் நடக்கும். ஆனால் எப்போது நடக்கும் என்பது தெரியாது.



இவ்வாறு கங்குலி கூறினார்.

பகல்-இரவு டெஸ்ட் போட்டி இந்தியாவில் நடந்ததில்லை. வெளிநாட்டில் நடந்த பகல்-இரவு டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker