FOOTBALLLATEST UPDATESNEWSTAMIL

நெய்மரிடம் 12 மில்லியன் டாலர் தொகையை திரும்ப கேட்கிறது பார்சிலோனா

பிரேசில் நாட்டின் முன்னணி கால்பந்து வீரராக திகழ்பவர் நெய்மர். இவர் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கிளப் அணியான பார்சிலோனாவுக்காக கடந்த 2013 முதல் 2017-வரை விளையாடினார். அதன்பின் கால்பந்து வரலாற்றில் மிகவும் அதிகத் தொகையான 222 மில்லியன் யூரோவிற்கு பாரிஸ் ஜெயின்ட் ஜெர்மைன் அணிக்கு சென்றார்.

2013-ம் ஆண்டு பிரேசில் கிளப்பான சான்டோஸில் இருந்து பார்சிலோனாவுக்கு மாறினார். அப்போது நெய்மருக்கான உண்மையான டிரான்ஸ்பர் தொகையை பார்சிலோனா மறைக்கிறது. வரி முறைகேட்டை தவிர்ப்பதற்காக நெய்மருக்கு பார்சிலோனா அதிக அளவில் சம்பளம் கொடுக்கிறது என குற்றச்சாட்டு எழுந்தது.

இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் பார்சிலோனா 11.8 மில்லியன் டாலர் தொகை கண்டியிருக்க வேண்டியதில்லை என சமீபத்தில் இந்த விவகாரத்தை முடித்து வைத்தனர். இதனால் நெய்மர் அந்தத் தொகையை திரும்ப வழங்க வேண்டும் என பார்சிலோனா விரும்புகிறது.

கொரோனா வைரசால் பார்சிலோனா கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. வீரர்களை பெரிய அளவில் ஒப்பந்தம் செய்யவில்லை. வீரர்களின் சம்பளத்தை மிகப்பெரிய அளவில் குறைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker