COVID - 19

தனியார் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

தனியார்துறையைச் சேர்ந்த ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையினை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தனியார்துறையைச் சேர்ந்த ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை 60 ஆக உயர்த்துவது குறித்து அவதானம் செலுத்தவுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.

தொழில் அமைச்சில் இன்று இடம்பெற்ற தொழில் ஆலோசனை சபை கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைவடையும் நிலை காணப்படுவதால் ஊழியர்களின் ஆளணியில் வெற்றிடங்கள் ஏற்படலாம் என அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

எனவே குறித்த துறைகளில் உரிய தகமையைக் கொண்டுள்ள ஊழியர்களின் சேவையை தொடர்ந்தும் பெற்றுக்கொள்ளும் நோக்கில், தனியார் துறை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 60வரை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா மேலும் தெரிவித்தார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker