TAMIL

டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அரைஇறுதியில் ஸ்விடோலினா

முன்னணி 8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது. வீராங்கனைகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு ரவுண்ட்-ராபின் முறையில் மோதுகிறார்கள். இதில் ஊதா நிற பிரிவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் சிமோனா ஹாலெப்பை (ருமேனியா) தோற்கடித்தார். தொடர்ந்து 2-வது வெற்றியை ருசித்த ஸ்விடோலினா முதல் வீராங்கனையாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), அமெரிக்க ஓபன் சாம்பியனான பியான்கா ஆன்ட்ரீஸ்குவை (கனடா) எதிர்கொண்டார். முதல் செட்டின் போது இடது காலில் காயத்தால் அவதிப்பட்ட பியான்கா சிகிச்சை எடுத்துக் கொண்டு தொடர்ந்து ஆடினார். முதல் செட்டை 3-6 என்ற கணக்கில் இழந்த நிலையில் வலி அதிகமாக இருந்ததால் மேற்கொண்டு விளையாடாமல் விலகினார். இதனால் பிளிஸ்கோவா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 2-வது தோல்வியை தழுவிய பியான்கா அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறினார்.


Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker