CRICKETLATEST UPDATESNEWSTAMIL

சேப்பாக்கத்தில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி? கிரிக்கெட் வாரியம் இன்று முடிவு

இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், ஐந்து 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

முதல் 2 டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. முதல் டெஸ்ட் வருகிற 5-ந் தேதி முதல் 9-ந் தேதி வரையிலும், 2-வது டெஸ்ட் 13-ந் தேதி முதல் 17-ந் தேதி வரையிலும் நடக்கிறது.

முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கும் ரசிகர்கள் அனுமதி கிடையாது என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஏற்கனவே அறிவித்தது.

இந்த நிலையில் பிப்ரவரி மாதத்துக்கான கொரோனா வழிகாட்டுதல் அறிவிப்பில் 50 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்று தமிழக அரசு குறிப்பிட்டு இருந்தது.

இதனால் சென்னை டெஸ்ட் போட்டிகளில் ரசிகர்களை அனுமதிப்பது குறித்து பேச்சுக்கள் மீண்டும் எழுந்துள்ளன. முதல் டெஸ்ட் போட்டி தொடங்க இன்னும் சில தினங்களே இருப்பதால், 50 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பதற்கான வாய்ப்பு இல்லை.

இதனால் 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து ரசிகர்களை அனுமதிப்பது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

சேப்பாக்கத்தில் நடை பெறும் 2-வது டெஸ்டில் பார்வையாளர்களை அனுமதிப்பது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்யும்.

இங்கிலாந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ரசிகர்களை அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது. இதனால் அந்த நாட்டு கிரிக்கெட் சங்கத்துடன் பேசி, இந்திய கிரிக்கெட் வாரியம் இது குறித்து முடிவு செய்து அறிவிக்கும்.

2-வது டெஸ்டில் ரசிகர்களை அனுமதிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கருதப்படுகிறது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker