CRICKETLATEST UPDATESNEWSTAMIL

சென்னை டெஸ்டில் சொதப்பல் – ரஹானே மீது மஞ்ச்ரேக்கர் பாய்ச்சல்

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 227 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியை 578 ரன்கள் எடுக்கவிட்டது இந்திய அணிக்கு பாதகமாகிவிட்டது.

இந்த டெஸ்டில் இந்திய அணியில் ரோகித்சர்மா, துணை கேப்டன் ரஹானே ஆகியோர் சொதப்பினர். குறிப்பாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ரஹானே முதல் இன்னிங்சில் ஒரு ரன் எடுத்தும், 2-வது இன்னிங்சில் டக்-அவுட் ஆகியும் ஏமாற்றம் அளித்தார்.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் மெல்போர்ன் டெஸ்டில் ரஹானே சதம் அடித்தார். கோலி நாடு திரும்பியதால் பொறுப்பை ஏற்ற ரஹானே தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது.

ஆனால் சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் ரஹானேவின் மோசமான பேட்டிங் கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருப்பதாக அவர் மீது இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக மஞ்ச்ரேக்கர் கூறும்போது, ‘‘கேப்டனாக இல்லாமல் ஒரு பேட்ஸ்மேனாக ரஹானேவை நான் பார்க்கும்போது, அவர் மெல்போர்ன் டெஸ்டில் சதம் அடித்த பிறகு 27 (நாட் அவுட்), 22, 4, 37, 24, 1 மற்றும் 0 ஆகிய ரன்களை எடுத்துள்ளார். சதம் அடித்த பிறகு சிறந்த வீரர்கள் அந்த பார்மை எடுத்து செல்கிறார்கள். சில வீரர்கள் அந்த பார்மில் இருந்து வந்துவிடுகிறார்கள்’’ என்று கூறி உள்ளார்.

ரஹானே மீது விமர்சனம் எழுந்தாலும் அவருக்கு கேப்டன் கோலி ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் புஜாராவும் ரஹானேவும் எங்களது மிக முக்கிய டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் ஆவர். அவரது திறமைகளை நாங்கள் நம்புகிறோம். அவர் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரர் என்றார்.

இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் ரஹானே கடைசியாக 7 இன்னிங்சில் 64 ரன் மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது டெஸ்ட் போட்டியும் சென்னை சேப்பாக்கத்தில்தான் நடக்கிறது. இப்போட்டி வருகிற 13-ந் தேதி தொடங்குகிறது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker