COVID - 19
சற்று முன் வெளியான தகவல் புங்குடுதீவு முடக்கப்பட்டது
இன்று அதிகரித்த கொரோன தோற்றாரால் புங்குடுதீவு கிராமத்திற்கு எவரும் உட்ச்செல்லவோ வெளிச்செல்லவோ அனுமதி இல்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன
பேருந்து உரிமையாளர் மற்றும் நடத்துனர் குடும்பங்களும் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது
கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து வீடு திரும்பிய பயண ஒழுங்குகளை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார்.
அவரை கொழும்பு தேசிய தொற்று நோயியல் (ஐடிஎச்) வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவருடன் நெருக்கமாகப் பழகியவர்கள் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு மாற்றப்படவுள்ளனர்.