COVID - 19LATEST UPDATESNEWSTAMIL

கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் இருவர் உயிரிழப்பு

இலங்கையில் மேலும் இரண்டு கொவிட் 19 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு 11 பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஆணொருவரும் களனி பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தற்போது இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker