TAMIL

ஐபிஎல் தொடர்: காலி மைதானத்திலாவது நடத்த முடியுமா? என ஆலோசித்து வருகிறோம்-சவுரவ் கங்குலி

கொரோனா காரணமாக, இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தள்ளிப்போன நிலையில், இனி அது நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து சவுரவ் கங்குலி கூறியதாவது:-

தொடரை நடத்துவதற்கான அனைத்து சாத்தியங்கள் குறித்தும், பிசிசிஐ ஆராய்ந்து வருகிறது. காலி மைதானத்திலாவது தொடரை நடத்த முடியுமா என ஆலோசித்து வருகிறோம்.

ஐபிஎல் தொடருக்காக, விளம்பரதாரர்கள், பங்குதாரர்கள், ரசிகர்கள் என அனைத்துத் தரப்பினரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தொடரில் பங்கேற்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் ஆவலாக இருப்கிறார்கள் , ஐபிஎல் குறித்து பிசிசிஐ விரைவில் அறிவிக்கும் எனவும் தெரிவித்தார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker