IPL TAMILTAMIL

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டி: பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஐபிஎல் தொடரின் 6வது லீக் போட்டி இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதன்படி பஞ்சாப் அணியின் சார்பில் அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.

இறுதியில் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூர் அணி 17 ஓவர்கள் முடிவில் 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ராகுல் மட்டுமே ஆட்டமிழக்காமல் 132 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணித் தரப்பில் பிஷ்னாய் மற்றும் அஸ்வின் தலா 3 விக்கெட்டுகளையும், காட்ரெல் 2 விக்கெட்டுகளையும், ஷமி மற்றும் மேக்ஸ்வெல் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker