TAMIL

உலக வுசூ போட்டியில் இந்திய வீரர் பிரவீன்குமார் தங்கம் வென்று சாதனை

15-வது உலக வுசூ (தற்காப்பு கலை போட்டி) சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் நடந்தது. இதில் ஆண்களுக்கான ‘சன்டா’ 48 கிலோ எடைப்பிரிவில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்திய வீரர் பிரவீன்குமார் 2-1 என்ற கணக்கில் பிலிப்பைன்ஸ் வீரர் ரஸ்செல் டியாசை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வுசூ வீரர் என்ற சாதனையை பிரவீன்குமார் படைத்தார்.


Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker