TAMIL

இம்ரான்கானை போல் செயல்படுகிறார் விராட் கோலி… சோயிப் அக்தர் பாராட்டு

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான்கானுடன் ஒப்பிட்டு சோயிப் அக்தர் பாராட்டி உள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளரான சோயிப் அக்தர், அவர் அளித்த பேட்டி ஒன்றிலே இதனை பற்றி கூறியிருந்தார். அதில் அவர் கூறியதாவது,



பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான்கான் தனது கேப்டன்ஷிப்பில் இருந்தபோது, பயிற்சியின் நேரத்தில் அவர் 10 முறை மைதானத்தை சுற்றி வருவார்.

3 மணிநேரம் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபடுவார். இதனால் அணியில் மற்ற வீரர்களும் அதுபோன்ற பயிற்சிகளை மேற்கொண்டனர்.

அதைப்போல் விராட் கோலி உடற் தகுதியில் தீவிர கவனம் செலுத்துகிறார். அவரை அணி வீரர்கள் பின்பற்றுகிறார்கள். அவர் தீவிரத்துடன் விளையாடுகிறார். நிறைய ரன்களை குவிக்கிறார்.



இதனால் அணியில் மற்ற வீரர்களும் கோலியின் தரத்தை பின் தொடர்கிறார்கள்.

களத்தில் மட்டுமல்ல மைதானத்துக்கு வெளியேயும் கோலியை வீரர்கள் பின்பற்றுகிறார்கள்.

விராட் கோலியின் அணியுடன் ஒப்பிட வேண்டும் என்றால் பாகிஸ்தான் அணி எவ்வாறு முன்னேற வேண்டும் என்று கேப்டன் அசார் அலி, பயிற்சியாளர் மிஸ்பா-உல்-‌ஷகி சிந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker