TAMIL

இந்திய பேட்ஸ்மேன்கள் தங்களுக்காகவே விளையாடுவார்கள், அணிக்காக அல்ல- இன்சமாம்-உல்-ஹக்

பாகிஸ்தானின் முன்னாள் கேப்டனும், தலைமை தேர்வாளருமான இன்சமாம்-உல்-ஹக் யூடியூப் சேனல் ஒன்றுக்கு முன்னாள் வீரர ரமீஸ் ராஜாவுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

நான் விளையாடும் போது பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், இந்திய பேட்ஸ்மேன்கள் தங்கள் இடத்தைப் பாதுகாக்க விளையாடுவார்கள், அதே நேரத்தில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அணிக்காக விளையாடுவார்கள்.

குறிப்பாக இம்ரான்கான் தலைமையில் விளையாடும் போது.

வீரர்கள் தொடர் அடிப்படையில் சிந்திக்கிறார்களானால், அவர்கள் ஒன்றில் வெற்றி பெற்றால் அவர்களுக்கு இடம் கிடைக்கும், தோல்வியுற்றால் அவர்கள் கைவிடப்படுவார்கள்.

மோசமான தொடர் அல்லது இரண்டிற்குப் பிறகு இம்ரான் கான் ஒருபோதும் வீரர்களை ஒருபோதும் கைவிட மாட்டார்.

எங்கள் காலத்தில், இந்தியா எங்களை விட பேப்பரில் மிகவும் வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டிருந்தது. பேட்ஸ்மேன்கள் என்ற எங்கள் சாதனை அவர்களை விட சிறந்தது அல்ல.

ஆனால் எங்களில் ஒருவர் 30-40 ரன்கள் எடுத்தால், நாங்கள் அதை அணிக்காக எடுத்தோம். இந்திய வீரர் ஒரு சதம் அடித்தால் அது அணிக்காக இருக்காது, அவர் தனக்காக விளையாடுவார்.

அது எங்களுக்கும் அவர்களுக்கும் ஒருவித்தியாசத்தை ஏற்படுத்தியது

இப்போது எங்கள் வீரர்கள் தங்கள் இடத்தை இழந்துவிடுவார்களோ என்று பயப்படுகிறார்கள்.

தங்களது அடையாளத்தை வெளிப்படுத்த ஒன்று அல்லது இரண்டு இன்னிங்ஸ் மட்டுமே இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள், எனவே அணிக்கு என்ன தேவை என்பதை அவர்கள் உணரவில்லை.

அதனால்தான், கேப்டனும்-பயிற்சியாளரும் ஒரே பக்கத்தில் இருந்தால், அவர்கள் வீரர்களுக்கு அணியின் தேவைகளுக்கு ஏற்ப விளையாடுவதற்கான பாதுகாப்பையும் நம்பிக்கையையும் அளிக்க முடியும் என்று இன்சமாம் கூறினார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker