CRICKETLATEST UPDATESNEWSTAMIL

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னை வந்தடைந்தனர்

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. முதல் டெஸ்ட் பிப்ரவரி 5-ம்தேதி தொடங்குகிறது.

இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.

இங்கிலாந்து வீரருக்கு கொரோனா பரிசோதனை

இந்த நிலையில் இங்கிலாந்து வீரர்கள் இன்று சென்னை வந்தடைந்தனர். சென்னை விமான நிலையம் வந்த அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

அதன்பிறகு ஓட்டலில் தனிமைப்படுத்தப்படுவார்கள். தனிமைப்படுத்திய காலம் முடிவடைந்த பின்னர் ஒன்றாக இணைந்து பயிற்சி மேற்கொள்வார்கள்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker