TAMIL

இங்கிலாந்தில் படிப்படியாக விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுமதி

கொரோனா வைரஸ் தொற்று ஒட்டுமொத்த உலகையும் ஆட்டிப்படைத்து வருகிறது. இதன் தாக்குதலில் இருந்து விளையாட்டு உலகமும் தப்பவில்லை.

இரண்டு மாதங்களுக்கு எந்த சர்வதேச போட்டிகளும் இல்லை என்ற நிலைமை உருவாகி விட்டது. இங்கிலாந்திலும் கொரோனா பாதிப்பு அதன் தாக்கத்தை காட்டியது.

இங்கிலாந்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 31,000 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

கொரோனா தாக்கத்தால் இங்கிலாந்தில் பிரபலமான கவுண்டி கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 12-ந் தேதி தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது. அது மே 28-ந் தேதி வரை தள்ளிவைக்கப்பட்டது.

இந்தநிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூலை 1 வரை தொழில்முறை கிரிக்கெட் ஆட்டங்களுக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.

தி ஹண்ட்ரெட் போட்டியை அடுத்த வருடத்துக்கு ஒத்திவைத்துள்ளது. ஒரு இன்னிங்ஸில் 100 பந்துகள் கொண்ட இப்போட்டி ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 15 வரை நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜூலை 1 வரை தொழில்முறை கிரிக்கெட் ஆட்டங்களுக்குத் தடை விதித்துள்ளதால் இங்கிலாந்தில் நடைபெறுவதாக இருந்த இங்கிலாந்து – மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான டெஸ்ட் தொடர், இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஆட்டங்கள் ஆகியவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், கடந்த 10-ம் தேதி இங்கிலாந்துப் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்த அறிவிப்பில்,

ஜூன் 1 முதல் இங்கிலாந்தில் படிப்படியாக விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுமதியளிக்கப்படும்.

ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறலாம்.

கொரோனாவின் பாதிப்பைப் பொறுத்து இதற்கான அனுமதி தொடர்ந்து நீட்டிக்கப்படும்.

தொலைக்காட்சியில் விளையாட்டுப் போட்டிகளைப் பார்க்கும் இங்கிலாந்து மக்களின் மனநிலை மேம்படும் மற்றும் நிதிச் சிக்கலை

ஓரளவு போக்கவும் இந்த நடவடிக்கை உதவும். விளையாட்டு மைதானம் போன்ற பெரிய கூட்டங்களை ஈர்க்கும் இடங்களை மீண்டும் திறப்பது “தொற்றுநோய்களின் எண்ணிக்கையைக் குறைப்பதைப் பொறுத்து மட்டுமே பின்னர் முழுமையாக சாத்தியமாகும் என்றார்.

இந்த சீஸனில் விளையாட்டுப் போட்டிகளில் எதுவும் இங்கிலாந்தில் நடைபெறாமல் போனால் 3,553 கோடி நஷ்டம் ஏற்படும் என்று

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைமை அதிகாரி டாம் ஹாரிஸன் கூறியிருந்தார், இந்நிலையில் இங்கிலாந்துப் பிரதமரின் அறிவிப்பு இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மாத இறுதியிலிருந்து இங்கிலாந்து வீரர்கள் பயிற்சிக்குத் திரும்புவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker