COVID - 19
சற்றுமுன் மேலும் 220 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்த மேலும் 220 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இந்த தகவலை சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.
முன்னதாக 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து குறித்த தொழிற்சாலையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 321 ஆக அதிகரித்துள்ளது.