CRICKETLATEST UPDATESNEWSTAMIL
வட மாரட்சி வேங்கைகள் அணி 78 ஓட்டங்களால் வெற்றி

ஞானம் பெயின்ரஸ் சம்பியன் கிண்ணத் துக்கான துடுப்பாட்டத் தொடரில் வட மாரட்சி வேங்கைகள்அணி, 78 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
சனிக்கிழமை சென்.பற்றிக்ஸ் கல்லூரி புற் தரை அடுகளத்தில் இடம் பெற்ற முதலாவது ஆட்டத்தில் வட மாரட்சி வேங்கைகள் அணியை எதிர்த்து அரியாலை கில்லாடிகள் – 100 அணிகள் மோதிக் கொண்டன. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அரியாலை கில்லாடிகள் – 100 அணி களத்தடுப்பை தெரிவுசெய்தது. அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய வட மாரட்சி வேங்கைகள் அணி 20 ஓவர்களில் 7 இலக்குகளை இழந்து 130 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் மதுஷன் 59 ஓட்டங்களையும், றுக்ஸ்மன் 38 ஓட்டங்களையும்,பெற்றுக் கொடுத்தனர். பந்துவீச்சில் அரியாலை கில்லாடிகள் 100 அணி சார்பில் , பிரபவன் 3 விக்கெட்டுக்களையும், சுயன்2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
139ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி யென பதிலுக்கு துடுப்பெடுத்து விளையாடிய அரியாலை கில்லாடிகள்100 அணியினர் 12.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களை இழத்து 60ஒட்டங்களைமட்டும்பெற்றது. இதில் சுரேந்திரன் 38 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் வட மாரட்சி வேங்கைகள் அணி சார்பில் சுஜிபன்.மோகன்ராஜ், 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.ஆட்டநாயகனாக வடமாரட்சி வேங்கைகள் அணி வீரர் மதுஷன்தெரிவானார்.