COVID - 19
ஊரடங்கு அமுலில் உள்ள பிரதேசங்களூடான போக்குவரத்து சேவை தொடர்பில் வெளியான தகவல்

தற்போது ஊரடங்கு அமுலில் உள்ள பிரதேசங்கள் ஊடாகவும் நெடுந்தூர பேருந்து சேவை இடம்பெறும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
எனினும், குறித்த பிரதேசங்களில் பயணிகளை ஏற்றி இறக்க அனுமதியில்லை எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இன்று மாலை ஆறு மணியில் இருந்து மறு அறிவித்தல் வரை ஊடரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.