CRICKETLATEST UPDATESNEWSTAMIL

20 ஓவர் போட்டியில் தமிழ்நாடு சாம்பியன்: சுழற்பந்து வீரர்களால் வெற்றி பெற்றோம் – பயிற்சியாளர் சொல்கிறார்

சையத் முஷ்தாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி சாம்பியன் பட்டம் பெற்றது. அந்த அணி இறுதிப் போட்டியில் பரோடாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்த போட்டி தொடரில் தமிழக அணி லீக் உள்பட 8 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று சாதித்தது. 2-வது முறையாக தமிழகத்துக்கு கோப்பை கிடைத்தது. இதற்கு முன்பு 2007-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் பெற்றிருந்தது.

இதுகுறித்து தமிழக அணியின் பயிற்சியாளர் டி.வாசு கூறும்போது, நீண்ட பயணத்துக்கு பிறகு கோப்பையை வென்றுள்ளோம். ஒட்டுமொத்த வீரர்களின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. சுழற்பந்து வீச்சாளர்களால் வெற்றி பெற்றோம். சுழற்பந்துதான் எங்களது பலம் என்றார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker