TAMIL

வங்காளதேச கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க பாங்கர் மறுப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் பாங்கர், நமது அணியின் பேட்டிங் பயிற்சியாளராக 2014-ம் ஆண்டில் இருந்து 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை பணியாற்றினார்.

அதன் பிறகு அந்த பதவியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.



அவரை தங்களது டெஸ்ட் அணியின் பேட்டிங் ஆலோசகராக நியமிக்க வங்காளதேச கிரிக்கெட் வாரியம் முயற்சி மேற்கொண்டது. இதையொட்டி அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஆனால் தனிப்பட்ட மற்றும் ஏற்கனவே ஒப்புக் கொண்ட கிரிக்கெட் நிகழ்ச்சி காரணமாக அவர்களின் வேண்டுகோளை ஏற்க மறுத்து விட்டார்.

எதிர்காலத்தில் இது போன்ற வாய்ப்பு அமைந்தால் வங்காளதேச கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து பணியாற்றுவேன் என்று பாங்கர் தெரிவித்தார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker