CRICKETLATEST UPDATESNEWSTAMIL

பும்ரா மனைவி கையில் இருக்கும் மெஹந்தி சொல்லும் காதல் கதை

இந்திய வேகப் புயல் பும்ரா உடனான காதல் எப்போது மலர்ந்தது என்பதை தனது கையில் வைத்திருக்கும் மெஹந்தி மூலம் சஞ்சனா கணேசன் வெளிப்படுத்திருக்கிறார்.

இந்தியா – இங்கிலாந்து தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விடுப்பு கேட்டு விலகினார்.

பும்ரா திருமணத்திற்காக தான் விடுப்பில் போகிறார் என்று தகவல் வெளியான நிலையில் மணப்பெண் யார் என்பது கடைசி வரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

அதன்பின் அவர் விளையாட்டு வர்ணனையாளர் சஞ்சனா கணேசனை திருமணம் செய்ய போகிறார் என்று தகவல் வெளியானது.

இந்நிலையில் மார்ச் 15-ம் திகதி குடும்ப உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள, பும்ரா – சஞ்சனா திருமணம் கோவாவில் சிறப்பாக நடைபெற்றது.

பும்ரா – சஞ்சனா கணேசன் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலரது வாழ்த்துகளை பெற்றது.

இதனிடையே மெஹந்தி நிகழ்ச்சியின் போது சஞ்சனா தனது கையில் போட்டிருக்கும் மெஹந்தி புகைப்படம் தற்போது கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த மெஹந்தியில் சஞ்சனா 2019 உலகக் கிண்ணம் லோகோவை தனது கையில் போட்டுள்ளார்.

இவர்கள் காதலும் அப்போது தான் மலர்ந்திருக்கும் என்று ரசிகர்கள் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

விளையாட்டு தொகுப்பாளினியாக இருந்த சஞ்சனா இங்கிலாந்தில் நடைபெற்ற 2019 உலகக்கிண்ணம் தொடரை தொகுத்து வழங்கினார்.

உலகக் கிண்ணம் தொடரில் 9 போட்டிகளில் விளையாடிய பும்ரா 18 விக்கெட்களை வீழ்த்தினார். ஆனால் அந்த தொடரில் முக்கியமான மற்றொரு விக்கெட்டை அவர் வீழ்த்தியிருப்பது தற்போது தான் பலருக்கும் தெரிய வந்துள்ளது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker