TAMIL

சென்னை மாவட்ட ஜூனியர் தடகள போட்டி: 3-ந் தேதி நடக்கிறது

சென்னை மாவட்ட ஜூனியர் ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நேரு ஸ்டேடியத்தில் வருகிற 3-ந் தேதி நடக்கிறது. இதில் 12, 14, 16 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் இருபாலருக்கும் சேர்த்து மொத்தம் 48 பந்தயங்கள் நடத்தப்படுகிறது. இதில் சுமார் 1,200 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். இந்த போட்டியில் இருந்து திருப்பதியில் நவம்பர் 23-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடைபெறும் மாவட்டங்களுக்கு இடையிலான 17-வது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கான சென்னை மாவட்ட அணி தேர்வு செய்யப்படும். இந்த தகவலை சென்னை மாவட்ட தடகள சங்க செயலாளர் சி.லதா தெரிவித்துள்ளார்.


Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker