CRICKETLATEST UPDATESNEWSTAMIL

சிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது ரி-10 போட்டியிலும் வெற்றி: தொடரை வென்றது ஆப்கானிஸ்தான் அணி!

சிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது ரி-10 போட்டியிலும் வெற்றி: தொடரை வென்றது ஆப்கானிஸ்தான் அணி!

சிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 45 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை 2-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது.

அபுதாபியில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கரீம் ஜெனட் 53 ஓட்டங்களையும் உஸ்மான் கானி 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சிம்பாப்வே அணியின் பந்துவீச்சில், முஸரபானி 2 விக்கெட்டுகளையும் நாகரவா, ட்ரிபானோ மற்றும் ரியான் பர்ல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 194 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சிம்பாப்வே அணி, 17.1 ஓவர்கள் நிறைவில் 148 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 45 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரியான் பர்ல் 40 ஓட்டங்களையும் ட்ரிபானோ 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில், ரஷித் கான் 3 விக்கெட்டுகளையும் நவீன் உல் ஹக் மற்றும் மொஹமட் நபி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் அமீர் அம்ஸா, பரீட் மலிக் மற்றும் கரீம் ஜெனட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 40 ஓட்டங்களையும் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்திய மொஹமட் நபி தெரிவுசெய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டி, இன்று அபுதாபியில் நடைபெறவுள்ளது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker