CRICKETLATEST UPDATESNEWSTAMIL
சச்சின் மகன் ஓவரில் 21 ரன்கள் விளாசிய சூர்யகுமார் யாதவ்: 47 பந்தில் 120 ரன்கள்

இந்தியாவின் உள்நாட்டு டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி டி20 டிராபி அடுத்த மாதம் 10-ந்தேதி தொடங்குகிறது. இதில் 38 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
மும்பை உத்தேச அணியில் சூர்யகுமார் யாதவ், சச்சின் தெண்டுல்கர் மகன் அர்ஜுன், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர்.
உத்தேச அணிகள் இரண்டாக பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. சூர்யகுமார் யாதவ் – யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அணிகளுக்கு இடையில் போட்டி நடைபெற்றது. சூர்ய குமார் பேட்டிங் செய்யும்போது சச்சின் தெண்டுல்கர் மகன் அர்ஜுன் பந்து வீசினார். அர்ஜுன் ஓவரில் சூர்யகுமார் யாதவ் 21 ரன்கள் விளாசினார்.
அதோடு மட்டுமல்லாமல் 10 பவுண்டரி, 9 சிக்சடன் 47 பந்தில் 120 ரன்கள் விளாசினார். சச்சின் தெண்டுல்கர் மகன் அர்ஜுன் நான்கு ஓவர்களில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் 480 ரன்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.