IPL TAMILTAMIL

ஐ.பி.எல். கிரிக்கெட்: பஞ்சாப் அணிக்கு 202 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத்

துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் இன்றைய 22வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி மோதுகிறது.

இதில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர்-பேர்ஸ்டோ ஜோடி களமிறங்கியது. இவர்கள் இருவரும் ஐதராபாத் அணிக்கு அபாரமான துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர்.

டேவிட் வார்னர் 40 ரன்களில் 52 ரன்கள் எடுத்த நிலையில், மேக்ஸ்வெல் வீசிய பந்தில், ரவி பிஷ்னோயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

மறுமுனையில் அதிரடி காட்டிய ஜானி பேர்ஸ்டோ 7 பவுண்டரிகளையும், 6 சிக்ஸர்களையும் பறக்க விட்டார். இதன் காரணமாக அணியின் ரன்ரேட் கணிசமாக உயர்ந்தது.

இதற்கிடையில் அப்துல் சமாத்(8 ரன்கள்), மனீஷ் பாண்டே(1 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தன.

தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் சதத்தை நோக்கி முன்னேறிய ஜானி பேர்ஸ்டோ 55 பந்துகளில் 97 ரன்கள் எடுத்த நிலையில், ரவி பிஷ்னோய் வீசிய பந்தில் எல்.பி.டபில்யூ முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

கேன் வில்லியம்சன்(20 ரன்கள்) தனது பங்கிற்கு 1 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸரை பறக்கவிட்டார்.

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது.

இதனை தொடர்ந்து கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 202 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாட உள்ளது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker