CRICKETLATEST UPDATESNEWSTAMIL

இஷாந்த் சர்மா 400 விக்கெட் வீழ்த்த வேண்டும் என விரும்புகிறேன்: அஷ்வின்

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்.
 
2-வது இன்னிங்சில் ஒரு விக்கெட் வீழ்த்தியது அவரது 300-வது விக்கெட்டாகும். இதன்மூலம் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் 300 விக்கெட்டை வீழ்த்திய 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
 
கபில்தேவ் 434 விக்கெட்டுக்களும், ஜாகீர் கான் 311 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.
 
300 விக்கெட் வீழ்த்திய இஷாந்த் சர்மா 400 விக்கெட் வீழ்த்த விரும்புகிறேன் என அஷ்வின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அஷ்வின் கூறுகையில் ‘‘இஷாந்த் சர்மா மிகவும் கடின உழைப்பை கொண்டுள்ள கிரிக்கெட்டர். நான் பார்த்த வரைக்கும் இந்திய அணி அறைகளில் இவர்தான்.
 
மிகவும் அதிகமான உழைப்பாளர். 6 அடி 4 அங்குலம் உயரம் கொண்ட அவருக்கு, ஒரு தொழில் மூலம் நிர்வகிக்க நிறைய அம்சங்கள் தேவைப்படுகின்றன, இது இப்போது கிட்டத்தட்ட 14 ஆண்டுகளில் பரவியுள்ளது.
 
இஷாந்த் சர்மா 2007-08-ல் ஆஸ்திரேலியா சென்று ரிக்கி பாண்டிங்கை வீழ்த்தினார். அப்புறம் ஏராளமான தொடர்களுக்கு சென்றுள்ளார். ஏராளமான காயங்கள் போன்றவற்றுடன் 100 டெஸ்ட் போட்டியை (98-வது போட்டிகளில் விளையாடி வருகிறார்) நெருங்குவது ஜோக் அல்ல. மிக மிக சாதனை. 
 
நான் 400, 500 விக்கெட் நோக்கி செல்ல முடியும். ஆனால் அவர் 400 விக்கெட், 500 விக்கெட் வீழ்த்துவதை பார்க்க விரும்புகிறேன். இது ஏராளமான இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சரியான முன்னுதாரணமாக இருக்கும்.
 
அவரைப்பற்றி ஏதாவது சொல்ல வேண்டுமென்றால், அவருடைய மிகப்பெரிய பலம் சிரிப்புதான். எப்போதும் சிரித்து கொண்டிருப்பார். அவர் மிகவும் சோர்வாக இருந்தால் கூட சிரித்துக் கொண்டிருப்பார்.
 
இன்று நகைச்சுவைக்காக அவரிடம், நீங்கள் பந்து வீச முடியாது என்றேன். உடனே அவர் சரி என்றார். ஏனென்றால் அவர் மிகவும் சோர்வாக இருந்தார். மிகவும் வேடிக்கையான குணம் கொண்ட நபர்’’ என்றார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker