TAMIL

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பெயர் பரிந்துரை

விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு தொடர்புடையவர்களுக்கு மத்திய அரசு பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது.

அதன்படி, 2020-ம் ஆண்டுக்கான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் துவக்க வீரர் ரோகித் சர்மா பெயரை பரிந்துரைத்துள்ளது.

இவர், கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை தொடரில் 5 சதம் உட்பட அதிகபட்சமாக 648 ரன்கள் குவித்தார்.

இஷாந்த் சர்மா, ஷிகார் தவான், தீப்தி சர்மா ஆகியோர் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker