TAMIL
பிசிசிஐ யின் தலைவராகிறார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி?
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி, பிசிசியின் புதிய தலைவராக ஒருமனதாக தேர்வாகும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. பிசிசிஐயின் தலைவர் மற்றும் பிற பதவிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், கங்குலிக்கு பெரும்பாலான நிர்வாகிகள் மத்தியில் ஆதரவு காணப்படுகிறது. இதனால், கங்குலி அப்பதவிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. கங்குலி பிசிசிஐ தலைவராக வரும் பட்சத்தில் எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியே என நிர்வாகிகள் பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர்.