TAMIL

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டி; சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி: தொடரையும் வென்றது

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது.

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது 20 ஓவர் போட்டி ஹாமில்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது.



இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா – கே.எல். ராகுல் களமிறங்கினர்.

முதல் 2 போட்டிகளில் சோபிக்காத ரோகித் சர்மா இன்றைய போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ராகுல் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடி ரோகித் அரைசதம் கடந்து 65 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணியில் 3-வது வீரராக களமிறங்கும் விராட் கோலி, இந்த முறை மாற்றத்திற்காக ஷிவம் துபேவை களமிறக்கினார்.

ஆனால் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷிவம் துபே 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

அடுத்து வந்த ஷிரேயாஸ் ஐயர் 17 ரன்களிலும், கேப்டன் விராட் கோலி 38 ரன்களிலும் அவுட்டாகினர்.

இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு179 ரன்கள் எடுத்தது.

நியூசிலாந்து அணி சார்பில் ஹமிஷ் பென்னட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.



தொடர்ந்து நியூசிலாந்து வீரர்கள் பேட்டிங் செய்தனர்.

நியூசிலாந்து 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் தான் எடுக்க முடிந்தது.

இதனால் சமனில் முடிந்தது.

நியூசிலாந்தில் அதிகபட்சமாக கேப்டன் வில்லியம்சன் 95 ரன்கள் அடித்து இருந்தார்.

இதை தொடர்ந்து சூப்பர் ஓவர் கொடுக்கப்பட்டது.

இந்தியா தரப்பில் பும்ரா வீசிய ஓவரில் நியூசிலாந்து 17 ரன்கள் எடுத்தது.

நியூசிலாந்து தரப்பில் சவுதி வீசிய ஓவரில் இந்தியா 20 ரன்கள் எடுத்தது.



சூப்பர் ஓவரில் இந்தியா 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 20 ஓவர் தொடரையும் இந்தியா கைப்பற்றி உள்ளது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker