TAMIL

கொரோனா வைரஸ் தாக்குதல்: மே 28-ந்தேதி வரை இங்கிலாந்தில் கிரிக்கெட் போட்டி கிடையாது

கொரோனா பரவல் காரணமாக இங்கிலாந்தில் மே 28-ந்தேதி வரை எந்தவிதமான தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளும் நடத்தப்படாது என்று அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதனால் அங்கு உள்நாட்டில் நடக்கும் முதன்மையான கிரிக்கெட் போட்டியான கவுண்டி சீசன் தொடங்குவது குறைந்தது 7 வாரங்கள் தாமதம் ஆகிறது.



18 முதல்தர கவுண்டி அணிகள் மற்றும் கிரிக்கெட் வீரர்களின் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசித்த பிறகு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த முடிவுக்கு வந்துள்ளது.

எனவே ஜூன் 4-ந்தேதி தொடங்க வேண்டிய இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரும் தள்ளிப்போகிறது.

இதே போல் இலங்கை கிரிக்கெட் வாரியமும் தங்கள் நாட்டு உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை மறுஅறிவிப்பு வரும்வரை தள்ளிவைப்பதாக அறிவித்துள்ளது.



அயர்லாந்து-வங்காளதேசம் அணிகள் இடையே மே மாதம் நடக்க இருந்த மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் நான்கு 20 ஓவர் போட்டிகளும் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker