TAMIL

கொரோனா பீதி: விமானத்தில் தும்மினால் இது தான் கதி..! அனுபவித்ததை புகைப்படத்துடன் விவரித்த அஸ்வின்

இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், சமீபத்திய கொடிய கொரோனா வைரஸ் மக்களை எவ்வாறு பாதித்துள்ளது என்பதை ட்விட்டரின் வாயிலாக விவரித்துள்ளார்.

உலகம் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்தியாவிலும் இது தொடர்பான புதிய வழக்குகள் உள்ளன.



உலக சுகாதார அமைப்பு ‘உலக அவசரநிலை’ அறிவித்துள்ளது. வுஹான் நகரில் கொரோனா தோன்றியதால் சீனா மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ஆர் அஸ்வின், முகமூடி அணிந்திருக்கும் தனது புகைப்படத்துடன் வைரஸ் குறித்த செய்தியை வெளியிட்டுள்ளார்.

நேரம் மிகவும் மாறிவிட்டது, நீங்கள் தும்மும்போது அல்லது இருமும்போது, விமானத்தில் உள்ள அனைவரும் சமூக விரோதியை போல் பார்க்கின்றனர் என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

இந்தியா ஏற்கனவே சீனாவில் உள்ள தனது குடிமக்களை வெளியேற்றியுள்ளது. சரியான சோதனைக்கு பின்னர் அவர் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஜேர்மனி, ஜப்பான், வியட்நாம் மற்றும் அமெரிக்காவிலும் சீனாவுக்கு பயணம் செய்த நோயாளிகள் உள்ளனர். இந்தியாவில் இதுவரை இரண்டு பேருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளன, இரண்டுமே கேரளாவில் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker