TAMIL

கொரோனாவுக்கு சிகிச்கையளிக்கும் முக்கிய உபகரணத்தை வாங்கி கொடுத்த இலங்கை வீரர்கள்

கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராட தேசிய மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் வாங்க இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர்களும் சட்டத் தொழிலில் சில உறுப்பினர்களும் நிதியுதவியளித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முக்கியமான தேவைகளில் ஒன்றான தேசிய மருத்துவமனைக்கு வீடியோ லாரிங்கோஸ்கோப்புகளை வாங்க அவர்கள் நிதியளித்துள்ளனர்.



இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இந்த உன்னத காரணத்திற்காக நிதியுதவியளித்துள்ளனர் ஆர்டர் செய்யப்பட்ட உபகரணங்கள் இலங்கைக்கு வந்தவுடன் தேசிய மருத்துவமனைக்கு ஒப்படைக்கப்படும்.

முன்னதாக, கொரோனா வைரஸ் எதிராக போராட அரசாங்கத்திற்கு இலங்கை கிரிக்கெட் ரூ. 25 மில்லியன் நிதியுதவி அளித்தது நினைவுக் கூரத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker