TAMIL

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-ஜாம்ஷெட்பூர் ஆட்டம் ‘டிரா’

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு ஜாம்ஷெட்பூரில் நடந்த 35-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் மோதின.

தொடக்கம் முதலே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தன.

26-வது நிமிடத்தில் சென்னை அணி வீரர் வால்ஸ்கிஸ் அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு அருமையாக கோலுக்குள் திரும்பியது.

முதல் பாதியில் சென்னை அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. 89-வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணி வீரர் ஐசக் பதில் கோல் திருப்பினார்.

பரபரப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

7 ஆட்டங்களில் விளையாடி இருக்கும் சென்னை அணி ஒரு வெற்றி, 3 டிரா, 3 தோல்வி கண்டுள்ளது. இன்று ஓய்வு நாளாகும்.

புனேயில் நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 36-வது லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி.-ஐதராபாத் எப்.சி. அணிகள் மோதுகின்றன.



Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker