TAMIL

எதிர்கால திட்டம் குறித்து கோலியுடன் டோனி பேசி இருப்பார் – கங்குலி

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது கூறியதாவது:-

இந்திய மூத்த வீரர் டோனி, தனது எதிர்கால திட்டம் குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் தேர்வாளர்களிடம் நிச்சயம் பேசி இருப்பார்.

அது பற்றி விவாதிப்பதற்கு இது சரியான இடம் அல்ல. டோனி என்ன செய்ய விரும்புகிறார் என்பது அவரது முடிவு. அது பற்றி எனக்கு தெரியாது.



இது குறித்து அவரிடம் நான் பேசவில்லை. ஆனால் அவர் இந்திய கிரிக்கெட்டில் ஒரு சாம்பியன் வீரர்.

அடுத்த ஆண்டு (2020) இறுதியில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் அந்த அணியை டெஸ்ட் தொடரில் தோற்கடிப்பது தான் இந்தியாவுக்கு உள்ள மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவை அவர்களது இடத்தில் வீழ்த்திய போது அந்த அணியில் முன்னணி வீரர்கள் (வார்னர், ஸ்டீவன் சுமித்துக்கு தடை) இல்லை என்பதை இந்திய வீரர்கள் அறிவார்கள்.

இவ்வாறு கங்குலி கூறினார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker