TAMIL

இந்தியா-இலங்கை இரண்டாவது 20 ஓவர் போட்டி – இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

மலிங்கா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி, 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது.

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று முன்தினம் இரவு நடக்க இருந்தது.



போட்டி தொடங்குவதற்கு முன்பு பெய்த மழையில் ஆடுகளம் பாதிக்கப்பட்டதால் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் போட்டி ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கார் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். ரத்து செய்யப்பட்ட முதல் ஆட்டத்திலும் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker